2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

மலசலக்கூடக் குழியிலிருந்து ஷெல் மீட்பு

Kanagaraj   / 2014 ஏப்ரல் 27 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ற.றஜீவன்

யாழ்.அச்சுவேலி இராச வீதியிலுள்ள வீடொன்றின் மலசலக்கூடக் குழியினுள் இருந்து 80 மில்லிமீற்றர் ஷெல் ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை (27) காலை மீட்கப்பட்டதாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வீட்டின் மலசலகூடக் குழியினை துப்பரவு செய்யும் போது அக்குழிக்குள் மர்மப்பொருளொன்று  இருப்பதனை கண்ட  வீட்டார் அது தொடர்பில் அச்சுவேலிப் பொலிஸாருக்கு  தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து இராணுவத்தினரின் குண்டு செயலிழக்கும் பிரிவினருடன் குறித்த குண்டை  மீட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வீடு இராணுவ முகாமாகப் பயன்படுத்தப்பட்டு அண்மையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .