2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

இராணுவ தலையீட்டை நிறுத்தவும்: யாழ். தளபதியிடம் கோரிக்கை

Menaka Mookandi   / 2014 ஏப்ரல் 27 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

கல்விசார் செயற்பாடுகளில் இராணுவத் தலையீட்டை நிறுத்துமாறு முற்போக்க தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் சுதர்சிங்க விஜயகாந்த், யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி உதய பெரேராவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் விஜயகாந்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

'யாழ். பல்கலைக்கழகத்தின் பாலசிங்கம் ஆண்கள் விடுதிக்குள் இராணுவ புலனாய்வாளர்கள் வியாழக்கிழமை (24) நுழைந்து விசாரணைகள் மேற்கொண்டமையினால் மாணவர்களிடையே பெரும் அச்ச நிலைமை ஏற்பட்டுள்ளது.

மாணவர்களின் கல்வியில் இராணுவத்தினர் கை வைப்பது வேதனை தருவதுடன், விசனத்தினையும் ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய செயற்பாட்டினை இராணுவம் உடனடியாக நிறுத்த வேண்டும். இலட்சியத்துடன் கல்வி கற்றுக்கொண்டிருக்கும் மாணவர்களின் சிந்தனைப் போக்கை மாற்றுவதற்கு முயல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.

எனவே, இத்தகைய செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துவதற்கான நடவடிக்கையினை எடுக்குமாறும் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்' என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .