2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் கால்பந்தாட்ட வீரர் படுகாயம்

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 28 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நா.நவரத்தினராசா 

யாழ். இளவாலை சென்.ஹென்றிஸ் கல்லூரிக்கு முன்பாக  மோட்டார் சைக்கிளொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதியதால்,  படுகாயமடைந்து கோமா நிலையிலுள்ள கால்பந்தாட்ட வீரரான ந.சதீஸ்கரன் (வயது 27) என்பவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக இளவாலை பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் இளவாலை யங்கென்றீஸ் விளையாட்டுக் கழகத்தின் முன்னணி கால்பந்தாட்ட வீரர் ஆவார்.

ஞாயிற்றுக்கிழமை (27) இரவு இடம்பெற்ற இவ்விபத்தில் படுகாயமடைந்த இவர் உடனடியாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர்  மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும்  பொலிஸார் தெரிவித்தனர்.

கோமா நிலையிலுள்ள இவரை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டுசெல்வதற்கான முயற்சிகளை கால்பந்தாட்ட அணிகள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .