2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

யாழ். பொது நூலகத்திற்கு புத்தகங்கள் அன்பளிப்பு

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 28 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 
-சுமித்தி தங்கராசா


விஞ்ஞான தொழில்நுட்பவியலின் முன்னாள் அமைச்சரும் பேராசிரியருமான  லெஸ்லி குணவர்தனவின் நினைவாக அவரது  மனைவி விரு குணவர்த்தனவினால் யாழ். பொது நூலகத்திற்கு 500 புத்தகங்கள் அன்பளிப்பாக  திங்கட்கிழமை (28) வழங்கப்பட்டன.

இதன்போது, பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என். டக்ளஸ் தேவானந்தாவிடம் விரு குணவர்த்தன மேற்படி புத்தகங்களை  கையளித்தார்.

யாழ். பொதுநூலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மாநகரசபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா, யாழ். பொதுநூலக பிரதம நூலகர் இமெல்டா கருணாகரன், பேராசிரியர் எஸ்.தில்லைநாதன், பேராசிரியர் வி.நாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .