2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

ஒருவர் மூன்று பிரேரணைகள் மட்டும் கொண்டுவர முடியும்

Kogilavani   / 2014 ஏப்ரல் 29 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

வடமாகாண சபை அமர்வில் உறுப்பினர் ஒருவர் ஆகக்கூடியது மூன்று பிரேரணைகளை மாத்திரம் கொண்டுவர முடியும் என வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் திங்கட்கிழமை (28) தெரிவித்தார்.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு  கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபைக்கட்டிடத் தொகுதியில் திங்கட்கிழமை (28) இடம்பெற்றது.
இதன்போதே தவிசாளர் மேற்படி கருத்தினைத் தெரிவித்தார்.

உறுப்பினர் ஒருவர் கொண்டு வரும் பிரேரணை 150 சொற்களுக்கு உட்பட்டவையாக அமைய வேண்டும் என்பதுடன் ஒரு சபை அமர்வில் 15 பிரேரணைகள் மாத்திரம் எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

வடமாகாண சபையின் உறுப்பினர்களின் பாதுகாப்பு விடயம் தொடர்பாக அந்தந்த மாவட்டங்களன் பிரதிப் பொலிஸ் மா அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், பொலிஸார் ரோந்து மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வார்கள். தனிப்பட்ட பாதுகாப்பு தேவைப்படுபவர்கள் அந்தந்த பிரதேச பிரதிப் பொலிஸ்மா அதிபர்களுடன் தொடர்பு கொண்டு தனிப்பட்ட பாதுகாப்பினைப் பெறமுடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .