2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

வெளிவாரி பட்டப்படிப்பு வினாத்தாள்களை திருத்துவதில்லையென தீர்மானம்

Menaka Mookandi   / 2014 ஏப்ரல் 29 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

எதிர்வரும் மே மாதம் இடம்பெறவுள்ள வெளிவாரி பட்டப்படிப்பிற்கான பரீட்சை வினாத்தாள்களை திருத்தும் பணியினை மேற்கொள்வதில்லையென தீர்மானம் எடுத்துள்ளதாக யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் அமிர்தலிங்கம் இராஜகுமாரன் திங்கட்கிழமை (28) தெரிவித்தார்.

வெளிவாரி பட்டப்படிப்புக்கள் பரீட்சையின் வினாத்தாள்கள் திருத்தும் பணி உள்வாரியாகவும் வெளிவாரியாகவும் நடைபெற்ற வருகின்றன. அதனடிப்படையில், உள்வாரி ஆசிரியர்களுக்கு ஒரு வினாத்தாள்கள் திருத்துவதற்கு 80 ரூபா முதல் 100 ரூபா வரையான கொடுப்பனவும், வெளிவாரி ஆசிரியர்களுக்கு 30 ரூபா கொடுப்பனவும் வழங்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் வெளிவாரி ஆசிரியர்களின் கொடுப்பனவினை அதிகரித்துத் தரும்படி கடந்த 2 வருடங்களாக வெளிவாரி பட்டப்படிப்புக்கள் அலகிடம் கோரிக்கை விடுக்கப்பட்ட போதும், அந்தக் கோரிக்கையினை நிறைவேற்றவில்லை என்றும் அவர் கூறினார்.

மேலும், இம்மாதம் முதலாம் வாரத்திலும், கொடுப்பனவை உயர்த்தி தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட அறிக்கை, வெளிவாரி பட்டப்படிப்புக்கள் அலகிடம் மீண்டும் கையளிக்கப்பட்டன.

கையளிக்கப்பட்ட அறிக்கைக்கான பதில் கிடைக்காவிடின் எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள வெளிவாரி பட்டப்படிப்புக்கள் பரீட்சையின் வினாத்தாள்கள் திருத்தும் பணியில் வெளிவாரி ஆசிரியர்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .