2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

ஈ.ஜ.கட்சியின் மேதினம் பெரிதளவில் இல்லை: கே.வி.குகேந்திரன்

Kogilavani   / 2014 ஏப்ரல் 30 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமித்தி தங்கராசா

'தொழிலாளர்களின்  பிரச்சினை சரியான முறையில் நெறிப்படுத்தப்படாத காரணத்தினால் இம்முறை மேதினத்தினை கொண்டாடவில்லை' என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் கே.வி.குகேந்திரன் புதன்கிழமை (30) தெரிவித்தார்.

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் மே தினக்கூட்டம் தொடர்பில் அவரிடம் தொடர்பு கொண்டு கேட்டபொழுதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வடமாகாண சபை உருவாக்கப்பட்டு 6 மாதங்கள் ஆகியும் எமது தொழிலாளர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. இதனால், மக்களை வீதிக்கு அழைத்து ஊர்வலம் நடத்துவதென்பது பொருத்தமற்றது. அதனால், சிறுசிறு கூட்டங்களை நடத்த தீர்மானித்துள்ளதுடன், துண்டுப்பிரசுரங்களை விநியோகம் செய்தும், ஒட்டியும் வருகின்றோம்.

எனினும், ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தொழிற்சங்கங்கள் பருத்தித்துறை, கோண்டாவில், மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களில் மேதினக் கூட்டத்தினை நடத்துவார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X