2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

இளைஞன் மீது வாள்வெட்டு

Kogilavani   / 2014 மே 04 , மு.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான்

கொடிகாமம் கச்சாய் வீதியில் சனிக்கிழமை(3)  இரவு 12 பேர் கொண்ட கும்பலினால் மேற்கொள்ளப்பட்ட வாள் வெட்டில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் கச்சாய்ப் பகுதியினைச் சேர்ந்த உதயகுமாரன் குமாரன் (24) என்பவரே படுகாயமடைந்துள்ளார்.

மேற்படி இளைஞர்; சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X