2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் நால்வர் படுகாயம்

Kogilavani   / 2014 மே 04 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சுமித்தி தங்கராசா

யாழ்.கல்வியங்காடு சட்டநாதர் கோவிலடியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (04) நேருக்கு நேர் மோதியதில் நால்வர் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்.

நீர்வேலியினைச் சேர்ந்த சஞ்சீவ் (25), கோமலன் (26) மற்றும் கல்வியங்காட்டினைச் சேர்ந்த நிரோசன் (20), தனுராஜ் (29) ஆகிய நால்வரே படுகாயமடைந்தனர்.

நீர்வேலியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்த மோட்டார் சைக்கிள், பேரூந்து ஒன்றினை முந்திச் செல்ல முற்பட்ட போது, எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதிலே இந்த விபத்து ஏற்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X