2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

வீதியின் குறுக்காக ஓடிய சிறுவன் படுகாயம்

Kanagaraj   / 2014 மே 05 , மு.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நா.நவரத்தினராசா

வீதியின் குறுக்காக ஓடிய சிறுவன் மோட்டார் சைக்கிளில் மோதி படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இளவாலைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இளவாலை பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(04) இடம்பெற்ற இவ்விபத்தில் ஜ.ஜெனுசன் (11) என்ற சிறுவன் படுகாயமடைந்துள்ளார்

வீதியின் மறுபக்கத்தில் நின்றிருந்த சிறுவன் வீதியை கடக்க முற்பட்ட போது இவ்விபத்து ஏற்ப்பட்டுள்ளது.

சிறுவனின் கால் முறிந்த நிலையில் முதலில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்து மேலதிக சிகிச்சைகளுக்கான யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X