2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

Kanagaraj   / 2014 மே 05 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ற.றஜீவன்

பருத்தித்துறை பன்னக்கட்டைப் பகுதியில் மின்சாரம் தாக்கி இன்று திங்கட்கிழமை (05) ஒருவர் உயிரிழந்துள்ளதாக பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

பருத்தித்துறை கொட்டடியினைச் சேர்ந்த இராசரத்தினம் ஜெயரத்தினசீலன் (52) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.

பன்னக்கட்டைப் பகுதியில் மேசன் வேலை செய்வதற்காகச் சென்றிருந்த இவர், துளையிடும் இயந்திரத்திற்கு மின்சார இணைப்பை கொடுக்க முனைந்துள்ளார்.

இதன்போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இவரது சடலம் தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X