2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

பொதுமக்களின் முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை

Kogilavani   / 2014 மே 07 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா 

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயற்பாட்டினை பிரதேச செயலக ரீதியில் முன்னெடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் வடமாகாண பணிப்பாளர் க.தியாகராஜா புதன்கிழமை (07) தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

வடமாகாணத்திலுள்ள 5 மாவட்டங்களின் 33 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் இந்த நடவடிக்கை  முன்னெடுக்கப்படவுள்ளது.  

இலங்கையின் அரசியலமைப்பின் 18ஆம் திருத்தச் சட்டத்தின் கீழ் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீதோ அல்லது பொலிஸ் படைக்கு எதிராக பாதிக்கப்பட்ட நபர் ஒருவரினால் முறைப்பாடுகள் கிடைக்கப்படுமிடத்து அதனை விசாரிக்கவும், பாதிக்கப்பட்ட நபருக்கு நிவாரணம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்களினால், பொலிஸாருக்கு எதிராக செய்யப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பாக பொலிஸார் செயற்படாமை, பொலிஸார் மக்களை தாக்குதல், அடித்தல், பொலிஸார் பொதுமக்களை துன்புறுத்தல், அதிகாரங்களை முறைகேடாகப் பயன்படுத்துதல் அல்லது துஷ்பிரயோகம் செய்தல், பக்கச்சார்பாக நடந்து கொள்ளுதல் போன்ற விடயங்கள் குறித்து முறைப்பாடு பதிவு செய்வதற்கான விழப்புணர்வினை மக்களுக்கு வழங்குதல் என்பவை தொடர்பாக கிராம அலுவலர்களுடன் எதிர்வரும் வாரத்தில் கலந்துரையாடவுள்ளதாகப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X