2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

இலங்கையின் வெளிநாட்டுத் தூதுவர்கள் - உதயபெரேரா சந்திப்பு

Kanagaraj   / 2014 மே 08 , மு.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


-செல்வநாயகம் கபிலன்


வெளிநாடுகளில் நியமிக்கவுள்ள இலங்கையின் தூதுவர்கள் அடங்கிய 12 பேர் கொண்ட குழு நேற்று புதன்கிழமை (07) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு யாழ். மாவட்ட படைகளின் கட்டளைத் தளபதி உதய பெரேராவினை பலாலி படைத் தலைமையகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்கள்.

நேற்று (07), யாழ்ப்பாணம் விஜயம் மேற்கொண்ட இவர்கள் நல்லூர் கந்தசுவாமி ஆலயம், யாழ். பொதுநூலகம், யாழ்ப்பாணக் கோட்டை ஆகியவற்றினைப் பார்வையிட்டதுடன், யாழ். மாவட்டச் செயலர் சுந்தரம் அருமை நாயகத்தினை மாவட்டச் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்கள்.

இதனைத் தொடர்ந்தே யாழ். மாவட்ட படைகளின் கட்டளைத் தளபதியினைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X