2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

பனை உற்பத்தியின் தன்மையினை மாற்றவேண்டும்:மத்திய வங்கி ஆளுநர்

Kanagaraj   / 2014 மே 10 , மு.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சொர்ணகுமார் சொரூபன்

வடபகுதியிலுள்ள பனை வளத்தை கொண்டு உற்பத்தி செய்கின்ற பனம் பொருட்களின் உற்பத்திகளின் தன்மைகளை அல்லது வடிவத்தை மாற்றவேண்டும். அதன் மூலமே உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நுகர்வோரை இலகுவில் கவரக்கூடியதாக இருக்குமென மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரேல் வெள்ளிக்கிழமை (09) தெரிவித்தார்.

மத்திய வங்கியின் ஏற்பாட்டில், வடமாகாணத்தின் அபிவிருத்திக்காக சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாளர்களை ஊகுவித்தல் என்னும் தொனிப்பொருளிலான செயலமர்வு யாழ். ஹற்றன் நஷனல் வங்கியின் கேட்போர் கூடத்தில் வெள்ளிக்கிழமை (09) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

போரின் பின்னர் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் நாட்டில் சிறிய மற்றும் நடுத்தர உற்பத்திகளையும் உட்கட்டுமான வசதிகளையும் அதிகரிக்கும் நோக்கில் 3 ½ பில்லியன் அமெரிக்கன் டொலர் செலவு செய்யப்பட்டுள்ளது.

வட மாகாணம் முன்னர் ஒரு பின்தங்கிய மாகாணமாக இருந்தது. ஆனால் இன்று அவ்வாறு இல்லாது இலங்கையின் முதுகெலும்பாக மாறியுள்ளது. இவ்வாறான நிலைமைக்;கு வட மாகாணம் உருவாவதற்கு சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்களே பிரதான காரணம்.

சிறிய மற்றும் நடுத்தர உற்பத்திகள்தான் எந்தவொரு நாட்டினதும் முதுகெலும்பாகவுள்ளன. அதற்கு இலங்கை ஒன்றும் விதிவிலக்கல்ல, இருப்பினும் மத்திய வங்கி இவ்வாறான வர்த்தகம் சார்ந்தவர்களை இணங்கண்டு ஊக்குவிக்கின்றது.

விவசாயத்தில் மட்டுமல்லாது புதிய கைத்தொழில் உற்பத்தி முயற்சிகளை மேற்கொண்டு அவற்றை சந்தைப்படுத்துவதன் மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள முடியும்.

சிறிய மற்றும் நடுத்தர உற்பத்திகள் இலங்கையில் போதாதுள்ளது. செலவு செய்யப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகளிற்கான பலன்கள் கிடைக்க வேண்டும், என்றால் உற்பத்தியினை பெருக்கி அதன் மூலமான வருமானத்தை அதிகரிக்க வேண்டும்.

இலங்கை மத்திய வங்கி, பிரதேச ரீதியான கைத்தொழில் அபிவிருத்தியை எவ்வாறு அதிகரிக்கலாம், அதனை எவ்வாறு ஊக்குவிக்கலாம் என்பது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் யாழ்பல்கலைகழகத்தின் வாழ்நாள் பேராசிரியருமான பொன்.பாலசுந்தரம்பிள்ளை மத்தியவங்கியின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X