2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

கஞ்சாவுடன் இருவர் கைது

Suganthini Ratnam   / 2014 மே 12 , மு.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா, செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணத்தில் கஞ்சா வைத்திருந்ததாகக் கூறப்படும் இருவரை ஞாயிற்றுக்கிழமை (11) கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

பண்ணைப் பாலத்தடியில் 800 கிராம் கஞ்சா வைத்திருந்ததாகக் கூறப்படும்  வேலணைஇயைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவரை கைதுசெய்த கடற்படையினர், அவரை தம்மிடம் ஒப்படைத்ததாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையப் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை,  வேலணை 6ஆம் வட்டாரப்; பகுதியிலுள்ள வீடொன்றில் 05 கிலோ கஞ்சா வைத்திருந்ததாகக் கூறப்படும்  35 வயதுடைய பெண்ணொருவரை கைதுசெய்ததாக  ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில்  பொலிஸாருக்கு  கிடைத்த  தகவலைத் தொடர்ந்து குறித்த இடத்திற்குச் சென்று கஞ்சாவை கைப்பற்றியதுடன், சந்தேக நபரை கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர். 

இந்தச் சந்தேக நபர்களிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X