2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

தேநீர் கடையில் மது விற்றவர் கைது

Suganthini Ratnam   / 2014 மே 15 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன் 

யாழ். நவக்கிரி நிலாவரை கிணற்றுப் பகுதியிலுள்ள தேநீர்க் கடை ஒன்றில்  மதுபானம் விற்பனை செய்ததாகக் கூறப்படும்  ஒருவரை வியாழக்கிழமை (15) கைதுசெய்ததாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், அக்கடையிலிருந்து  06 மதுபானப் போத்தல்களை கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர்.

இந்தச் சந்தேக நபர் தனது தேநீர்க் கடையில் வைத்து மதுபானம் விற்பனை செய்வதாக  பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து  வாடிக்கையாளர் போன்று சென்ற பொலிஸார், சந்தேக நபரைக் கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.

சந்தேக நபர் தற்போது பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும்  பொலிஸார் தெரிவித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X