2025 ஜூன் 30, திங்கட்கிழமை

புகைப்படம் எடுத்தவர்களுக்கு பிணை

Kogilavani   / 2014 மே 19 , பி.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி இரணைமடு இராணுவ முகாமினை கைத்தொலைபேசியில் புகைப்படமெடுத்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட மூவரையும் தலா 50 ஆயிரம் ரூபா ஆட் பிணைகளில் செல்ல கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வாகப்தீன் திங்கட்கிழமை (19) உத்தரவிட்டார்.

மேற்படி மூவரையும் கிளிநொச்சி நீதிமன்றத்தில் பொலிஸார் ஆஜர்ப்படுத்திய போது, மூவர் சார்பாகவும் ஆஜரான சட்டத்தரணி, மேற்குறித்த மூவரும் சுற்றுலாவிற்காகவே அங்கு வந்ததாகவும், அவ்விடத்தில் இராணுவ முகாம் இருப்பதினை அவர்கள் அறிந்திருக்கவில்லையெனவும் தெரிவித்தார்.

இதற்கமைய குறித்த மூவரையும் ஆட்பிணையில் செல்ல நீதவான் அனுமதியளித்தார்.

இரணைமடுப் பகுதியினைச் சுற்றிப் பார்க்க வந்த மேற்படி மூவரும், கனகாம்பிகைக்குளம் பகுதியில் நின்று உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்த இரணைமடு இராணுவ முகாமினை புகைப்படமெடுத்தனர் என்ற குற்றச்சாட்டில் இராணுவத்தினரால் திங்கட்கிழமை (19) கை செய்யப்பட்டு கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த இந்த மூவரில் ஒரு யுவதியும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X