2025 ஜூன் 30, திங்கட்கிழமை

வர்த்தகர்கள் ஐவருக்கு தண்டம்

Suganthini Ratnam   / 2014 மே 21 , மு.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான் 

யாழ். சாவகச்சேரி பகுதியில் காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்ததாகக் கூறப்படும்  05 வர்த்தக நிலையங்களின்  உரிமையாளர்களுக்கு தலா 9,000 ரூபா படி  சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரம்  செவ்வாய்க்கிழமை (20) தண்டம் விதித்தார்.

யாழ். மாவட்;டச் செயலக பாவனையாளர்கள் அதிகாரசபை அதிகாரிகள்; சாவகச்சேரி பகுதியில் கடந்த வாரம் மேற்கொண்ட சோதனையின்போது  மேற்படி வர்த்தகர்கள் பிடிக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, 05 வர்த்தகர்களுக்கும் எதிராக சாவகச்சேரி நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குகளை   பாவனையாளர்கள் அதிகார சபையின் அதிகாரிகள் தாக்கல் செய்தமை குறிப்பிடத்தக்கது. 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X