2025 ஜூன் 30, திங்கட்கிழமை

மதுச்சாலையில் கைகலப்பு; ஐவர் காயம்

Suganthini Ratnam   / 2014 மே 21 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன் 

யாழ். சாவகச்சேரி பகுதியிலுள்ள மதுபானச்சாலையொன்றில் இரு குழுவினருக்கிடையில் செவ்வாய்க்கிழமை (20)  இடம்பெற்ற கைகலப்பில் படுகாயமடைந்த ஐவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

சாவகச்சேரி கச்சாய் வீதியைச் சேர்ந்த உதயகுமார் அகிலன் (வயது 29), சாவகச்சேரி கல்வயல் பகுதியைச்  சேர்ந்த கனகரத்தினம் அஜந்தன் (வயது 28), சிவசுப்பிரமணியம் மாதவன் (வயது 27), சரசாலையைச் சேர்ந்த ஜெயரட்ணம் சிவராஜ் (வயது 27), ஜெயபாலரத்தினம் ஸ்ரீராஜ் (வயது 28) ஆகியோர்   காயமடைந்தனர்.

மேற்படி மதுபானச்சாலையில் மேற்படி  இரு குழுவினருக்கிடையில் செவ்வாய்க்கிழமை  (20) மதியம் இடம்பெற்ற கைகலப்பின்போது, உதயகுமார் அகிலன் (வயது 29) என்பவர் பியர் போத்தலினால் தாக்குதலுக்குள்ளானார்.

இதனைத் தொடர்ந்து அங்கு மீண்டும் செவ்வாய்க்கிழமை (20) இரவு கைகலப்பு இடம்பெற்ற நிலையில், நால்வர் காயமடைந்ததாகவும் பொலிஸார் கூறினர். 

இது தொடர்பில் விரிவான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X