2025 ஜூன் 30, திங்கட்கிழமை

பொலிஸார் திடீர் சோதனை: கசிப்புடன் ஒருவர் கைது

Kogilavani   / 2014 மே 21 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


- செல்வநாயகம் கபிலன்


அச்சுவேலிப் பொலிஸார் தமது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புத்தூர், ஆவரங்கால், மற்றும் அச்சுவேலிப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (20) மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் கசிப்புடன் ஒருவர் பிடிபட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்;படி சோதனை நடவடிக்கையினை கசிப்பு, கஞ்சா உள்ளிட்டவற்றை மோப்பம் பிடிக்கும் மோப்ப நாயின் உதவியுடன் மேற்கொண்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, புத்தூர்ப் பகுதியில் பற்றைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1 ½ லீற்றர் கசிப்பினைப் கைப்பற்றியதுடன், அதனை மறைத்து வைத்திருந்த 35 வயதுடைய நபரையும் கைதுசெய்துள்ளனர்.

மேற்படி நபர் தற்போது பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், இவருக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், இதேமாதிரியான சோதனை நடவடிக்கைகள் இனிவருங் காலப்பகுதியில் அச்சுவேலிப் பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட இடங்களில் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X