2025 ஜூன் 30, திங்கட்கிழமை

தொழில் வழிகாட்டல் பயிற்சி வகுப்பு

Kanagaraj   / 2014 மே 21 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான் 

தென்மராட்சி கல்வி வலய தொழில் வழிகாட்டல் பிரிவின் ஏற்பாட்டில், வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளின் 2015 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல் தொடர்பான பயிற்சி வகுப்புக்கள், நாளை வியாழக்கிழமை (22) ஆரம்பமாகவுள்ளதாக வலயக் கல்விப் பணிப்பாளர் சு.கிருஷணகுமார் இன்று (21) தெரிவித்தார்.

மூன்றாம் நிலைக் கல்வி உலகில் பிரகாசிப்போம் என்னும் தொனிப்பொருளில் உலக தரிசன நிறுவன  அனுசரணையுடன் இப்பயிற்சி வகுப்புக்கள் நடைபெறவுள்ளது. 

14 நாட்கள் நடைபெறவுள்ள இந்த பயிற்சி வகுப்பில் முதல் மூன்று நாட்களும் சாவகச்சேரி இந்துக் கல்லூரியிலும், தொடர்ந்து வரும் நாட்கள் கைதடி கைத்தொழில் அதிகார சபையின் தொழில் பயிற்சி நிலையத்திலும், விவசாய சேவைகள் நிலையங்களிலும் நடத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த பயிற்சி வகுப்புகளில் அடுத்த வருடம் க.பொ.த.உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள  தென்மராட்சி வலயத்தினைச் சேர்ந்த 11 பாடசாலைகளை சேர்ந்த 700 மாணவர்கள் பங்குபற்றவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X