2025 ஜூன் 30, திங்கட்கிழமை

தனிமையில் இருந்த பெண் படுகொலை

Kanagaraj   / 2014 மே 21 , பி.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்;. அரியாலை மத்தியில் வீட்டில் தனிமையிலிருந்த பெண் ஒருவர் இன்று (21)கொலை செய்யப்பட்டுள்ளதுடன் அவரது வீட்டிலிருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக  யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுந்தரம் இராசம்மா (65) எனும் குறித்த பெண் கழுத்து நெறிக்கப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

கொலை செய்யப்பட்ட பெண்ணும் அவரது மகளும் தனிமையில் வசித்து வரும் நிலையில் மகள் வேலைக்குச் சென்றிருந்த நேரம் வீட்டினுள் நுழைந்த கொள்ளையர்கள் குறித்த வயோதிப் பெண்ணை அடித்து கழுத்தை நெரித்து தூக்கில் தொங்க விட்டுள்ளனர்.

குறித்த பெண்ணின் சடலம், மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைகளுக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X