2025 ஜூன் 30, திங்கட்கிழமை

யார் எதை செய்தாலும் அது தமிழை வளர்ப்பதாக இருக்க வேண்டும்: குருகுலராஜா

Kogilavani   / 2014 மே 22 , மு.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

'யார் எதை செய்தாலும் அது தமிழை வளர்ப்பதாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் எமது கலை,கலாசர, பண்பாட்டு கோலங்களை அவை வெளிப்படுத்துவதாக இருத்தல் வேண்டும்' என வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா தெரிவித்துள்ளார்.

வடமாகாண கல்வி அலுவலகத்தில் புதன்கிழமை (21) நடைபெற்ற வடமாகாண கலைஞர்களுடனான சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் அதனை தெரிவித்திருந்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

'நாங்கள் இங்கே தமிழ் என்ற பெயரிலே பல குழுக்களை வைத்திருக்கின்றோம.; இங்கே ஒரு தமிழ், சங்கம் அங்கே ஒரு தமிழ் கூட்டுறவு சங்கம், அது இன்னாருடைய தமிழ் சங்கம், இது இன்னாருடைய தமிழ் சங்கம் என இருக்கிறது. அது இருக்கலாம்.

இது சுதந்திரமான நாடு. ஒவ்வொருவரும் தமக்குரிய பணியை செய்யலாம். அதில் ஒரு மாற்றுக் கருத்தும் கிடையாது.

கூட்டாக ஒரு முயற்சியை மேற்கொள்வதன் மூலம் தமிழை வளர்;ப்பதற்கான நல்லதொரு முடிவை எட்டலாம்.

எங்கள் மக்களுக்கு தெளிவு படுத்துவதன் மூலம் பிற்காலத்திலே எமது கலைகளை பேணிப்பாதுகாக்க  அது உதவும்' என நம்புகின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X