2025 ஜூன் 30, திங்கட்கிழமை

சிறுமியுடன் குடும்பம் நடத்திய இளைஞனுக்கு விளக்கமறியல்

Kogilavani   / 2014 மே 22 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

15 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய 21 வயது இளைஞனை எதிர்வரும் ஜுன் மாதம் 4 ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு குருநகர் பெண்கள் சிறுவர்கள் நீதிமன்ற நீதவான் கருப்பையா ஜீவராணி புதன்கிழமை (21) உத்தரவிட்டார்.

மேற்படி வழக்கு புதன்கிழமை (21) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சிறுமியின் மருத்துவ சான்றிதழ் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதனையடுத்து நீதவான் மேற்படி உத்தரவினைப் பிறப்பித்தார்.

ஆவரங்கால் பகுதியினைச் சேர்ந்த குறித்த சிறுமி முச்சக்கரவண்டியில் ஆவரங்காலிலுள்ள பாடசாலைக்குச் சென்று வந்த நிலையில் குறித்த முச்சக்கரவண்டிச் சாரதியான இளைஞனுடன் காதல் வயப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை (19) குறித்த சிறுமி தனது புத்தகப் பையினுள் உடுப்புகளையும் எடுத்துக் கொண்டு குறித்த முச்சக்கரவண்டி சாரதியுடன் சென்றுள்ளார்.

இந்நிலையில் தமது மகளைக் காணவில்லையென சிறுமியின் பெற்றோர் திங்கட்கிழமை (19) மாலை அச்சுவேலிப் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்தனர்.

இந்நிலையில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார் கடந்த செவ்வாய்க்கிழமை (20) கொடிகாமம் பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து சிறுமியை மீட்டதுடன், குறித்த இளைஞனைக் கைதுசெய்தனர்.

அத்துடன் குறித்த சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X