2025 ஜூன் 30, திங்கட்கிழமை

பாடசாலையில் திருட்டு: சிறுவனுக்கு விளக்கமறியல்

Kogilavani   / 2014 மே 27 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.பகவான் 

யாழ். கொடிகாமம் பகுதிக்குட்பட்ட பாடசாலையொன்றின் கணினி அறையிலிருந்த கணினியின் பாகங்களைத் திருடிய 17 வயது சிறுவனை எதிர்வரும் ஜுன் மாதம் 4 ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரம் திங்கட்கிழமை (26) உத்தரவிட்டார்.

மேற்படி பாடசாலையின் கணிணி அறையிலிருந்த 50 ஆயிரத்து 500 ரூபா பெறுமதியான கணினி உபகரணங்கள் கடந்த புதன்கிழமை (21) திருட்டுப் போயிருந்ததாக பாடசாலை அதிபரினால் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் வியாழக்கிழமை (22) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் அப்பகுதியினைச் சேர்ந்த 17 வயதுச் சிறுவன் ஒருவனை கடந்த சனிக்கிழமை (24) கைதுசெய்தனர்.

இச்சிறுவன் பாடசாலையின் மதிலைக் கடந்து சென்று பாடசலையில் உள்நுழைந்ததாக விசாரணைகளின் மூலம் தெரியவந்தது.

தொடர்ந்து மேற்படி சிறுவன் திங்கட்கிழமை (26) சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போதே நீதவான் மேற்படி உத்தரவினைப் பிறப்பித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X