2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஆலய பொருட்கள் திருட்டு: திருடனுக்கு விளக்கமறியல்

Kogilavani   / 2014 மே 27 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்.ஆவரங்கால் சிவன் கோயிலின் கதவை உடைத்து அங்கிருந்த பொருட்களைத் திருடிய நபரை எதிர்வரும் 6 ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ஜோய் மகிழ் மகாதேவா உத்தரவிட்டார்.

குறித்த நபரை ஞாயிற்றுக்கிழமை (25) கைதுசெய்த அச்சுவேலிப் பொலிஸார் திங்கட்கிழமை (26) நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போதே நீதவான் மேற்படி உத்தரவினைப் பிறப்பித்தார்.

யாழ்.ஆவரங்கால் சிவன் கோயிலின் கதவை உடைத்து அங்கிருந்த பொருட்களைத் சனிக்கிழமை (24) இரவு திருடிச் சென்றவர் ரோந்தில் சென்ற பொலிஸாரைக் கண்டு பொருட்களை கைவிட்டுவிட்டுத் தப்பியோடியிருந்தார்.

இதன்போது, ஆலயத்திலிருந்து திருடப்பட்ட டி.வி.டி பிளேயர், அம்ப் மற்றும் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட துவிச்கக்கரவண்டி ஆகியவற்றினை பொலிஸார் மீட்டனர்.

அத்துடன், துவிச்சக்கரவண்டியிலிருந்து திருடனுடைய காற்சட்டையும் மீட்கப்பட்டிருந்துடன், அந்த காற்சட்டையினை வைத்து மோப்பநாயின் உதவியுடன் ஆலயத்திலிருந்து 300 மீற்றர் தூரத்தில் வசிக்கும் 23 வயதுடைய நபர் கைதுசெய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி நபர் ஏற்கனவே சிறு திருட்டுக்களுடன் தொடர்புபட்டு கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டவர் என அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .