2025 ஜூன் 30, திங்கட்கிழமை

ஆசிரியர்களின் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது

Kanagaraj   / 2014 மே 27 , மு.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா, எம்.றொசாந்த் 

யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக, கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயிற்சிப்பெற்று, ஆசிரியர் உதவி ஆசிரியராக நியமனம் பெற்ற 50 இற்கும் மேற்பட்ட ஆசிரியர்களால் இன்று செவ்வாய்க்கிழமை (27) காலை மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம் வடமாகாண கல்வி அமைச்சரின் உறுதிமொழியின் பின்னர் கைவிடப்பட்டது.

தமக்கு வழங்கப்பட்டுள்ள வன்னிப் பகுதிக்கான இடமாற்றத்தினை தற்காலிகமாக இடைநிறுத்தும்படி கோரிக்கை விடுத்து ஆசிரியர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாதாந்தம் 10 ஆயிரம் ரூபா வேதனம் பெறும் தாங்கள் வன்னிப் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டால், வாழ்க்கைச் செலவினை ஈடுசெய்ய முடியாத இக்கட்டான நிலைக்குச் தள்ளப்படுவோம் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறினார்கள்.

யாழ்;. மாவட்டச் செயலகத்தில், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (27) இரண்டாவது நாளாக நடைபெற்று வரும் நிலையில், அங்கு வருபவர்களின் கவனத்தினை ஈர்க்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

வடமாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா மற்றும் வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் ஆகியோர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்ததுடன், ஆசிரியர்களின் பிரச்சினைகளுக்கான தீரவினை பெற்றுக்கெடுக்க நடவடிக்கை எடுப்பதாகக் உறுதியளித்ததினையடுத்து ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X