2025 ஜூன் 30, திங்கட்கிழமை

விபத்தில் ஒருவர் படுகாயம்

Kanagaraj   / 2014 மே 27 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நா.நவரத்தினராசா, செல்வநாயகம் கபிலன்

யாழ்.சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிளொன்று வேகக்கட்டுப்பட்டினை இழந்து மின்கம்பத்துடன் மோதியதில் படுகாயமடைந்த ஒருவர் செவ்வாய்க்கிழமை (27) யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த, மன்னார் வைத்தியசாலையில் தாதியராகக் கடைமையாற்றி வருபவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.

படுகாயமடைந்து வீதியோரத்தில் கிடந்ததை கண்ட பொது மக்கள் மீட்டு, சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X