2025 ஜூன் 30, திங்கட்கிழமை

குழு மோதல் : நால்வர் படுகாயம்

Kanagaraj   / 2014 மே 27 , பி.ப. 02:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ற.றஜீவன்

யாழ்.துன்னாலை ஆத்துப்பட்டி பகுதியில் இறந்த ஒருவரின் இறுதி ஊர்வலத்தின் போது குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் செவ்வாய்க்கிழமை (27) அனுமதிக்கப்பட்டுள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

இறுதி ஊர்வலத்தில் வெடி கொளுத்தி சென்றவர்களின் மத்தியில் ஏற்பட்ட கருத்து முரண்பாடே இம்மோதலுக்கு காரணம் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X