2025 ஜூன் 30, திங்கட்கிழமை

ஆசிரியர் உதவியாளர்களை நிரந்தரமாக்க நடவடிக்கை

Kogilavani   / 2014 மே 28 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


வடமாகாண ஆசிரியர் உதவியாளர்களை நிரந்தர நியமனத்திற்குள் உள்வாங்குவது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர்களான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனும் உறுதியளித்துள்ளனர்.

யாழ்.மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் வடமாகாண ஆசிரிய உதவியாளர் சங்கப் பிரதிநிதிகள் தமது கோரிக்கை தொடர்பில் செவ்வாய்க்கிழமை (27) இணைத்தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது கருத்துரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

'ஆசிரியர் உதவியாளர்களாக இருப்போரை நிரந்தர நியமனத்திற்குள் உள்வாங்கும் பொருட்டு உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.

2009 ஆம் ஆண்டு ஆசிரியர் உதவியாளர்களாக நியமனப் பெற்றதிலிருந்து நிரந்தர நியமனத்திற்குள் தம்மை உள்வாங்குமாறு ஆசிரிய
உதவியாளர்கள் விடுத்திருந்த கோரிக்கைக்கு அமைவாக இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

ஆசிரிய உதவியாளர்களுக்கு முதற்கட்டமாக 3,000 ரூபாவும் பின்னர் 6,000 ரூபாவும் தற்போது 10,000 ரூபாவுமாக மாதாந்த கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வருகின்றன' என தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X