2025 ஜூன் 30, திங்கட்கிழமை

சங்கிலித் திருடர்கள் அகப்பட்டனர்

Super User   / 2014 மே 28 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த் 

யாழ். சட்டநாதர் கோவிலடி வீதியில் தனியே நின்றிருந்த மூதாட்டியொருவரின் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் அறுத்துக் கொண்டு ஓட முயன்ற வேளை பொதுமக்களாள் பிடிக்கப்பட்டு இன்று புதன்கிழமை (28) தம்மிடம் ஒப்படைக்கப்பட்டதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த மூவரும் உரும்பிராய் மற்றும் ஊரெழுப் பகுதியினைச் சேர்ந்தவர்கள் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

இது பற்றித் தெரியவருவதாவது,

மோட்டார் சைக்கிளில் வந்த குறித்த மூவரும் மூதாட்டியின் சங்கிலியை அறுத்துக் கொண்டு செல்வதினை பின்னால் வாகனத்தில் வந்தவர்கள் அவதானித்து, மோட்டார் சைக்கிளில் சென்றவர்களைத் துரத்திச் சென்று முடமாவடிச் சந்தியில் வைத்து மடக்கிப் பிடித்தனர்.

தொடர்ந்து, குறித்த மூவரும் அப்பகுதியில் நின்றிருந்த பொதுமக்களிடம் நையப் புடைக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

குறித்த மூவரிடமும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், அவர்கள் அறுத்த சங்கிலியினை இடைநடுவே எறிந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X