2025 ஜூன் 30, திங்கட்கிழமை

டைனமேட் மூலம் பிடிக்கப்பட்ட மீன்களுடன் இருவர் கைது

Menaka Mookandi   / 2014 மே 29 , மு.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.றொசாந்த், செல்வநாயகம் கபிலன்


டைனமேட் வெடிவைத்து பிடிக்கப்பட்ட மீன்களை பொதி செய்துகொண்டிருந்த இருவரை யாழ்.சாவற்காட்டுப் பகுதியில் வைத்து நேற்று புதன்கிழமை (28) இரவு கைது செய்ததாக யாழ்.கடற்றொழில் நீரியல் வளத்துறை பிரதிப் பணிப்பாளர் நடராஜா கணேசமூர்த்தி இன்று வியாழக்கிழமை (29) தெரிவித்தார்.

தமக்குக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அவ்விடத்திற்குச் சென்று, இருவரையும் பிடித்ததுடன், டைனமேற் வெடிவைத்துப் பிடிக்கப்பட்ட 4 இலட்சம் ரூபா பெறுமதியான 1300 கிலோகிராம் மீன்களையும் கைப்பற்றியதாக அவர் தெரிவித்தார்.

குறித்த இருவரும், மீன்களை ஜஸ் பொதிகளில் பொதி செய்துகொண்டிருந்த போதே கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

மேற்படி நபர்களையும் அவர்களிடமிருந்து கைப்பற்றிய மீன்களையும் மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கணேசமூர்த்தி மேலும் தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X