2025 ஜூன் 30, திங்கட்கிழமை

துன்னாலையில் வீடு எரிப்பு; ஒருவருக்கு விளக்கமறியல்

Menaka Mookandi   / 2014 மே 30 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ். துன்னாலைப் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை (27) இடம்பெற்ற கோஷ்டி மோதலில் வீடு ஒன்று எரிக்கப்பட்டதில் ஒரு இலட்சத்து 30 ஆயிரம் ரூபா பெறுமதியான சொத்துக்கள் அழிவடைந்ததாகவும், இது தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தினால் ஜுன் 6ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் யாழ். பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் டி.எம்.திலகரட்ண இன்று வெள்ளிக்கிழமை (30) தெரிவித்தார்.

யாழ். தலைமைப் பொலிஸ் நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை (30) இடம்பெற்ற வாராந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேற்படி பகுதியில் இறந்த ஒருவரின் இறுதி ஊர்வலத்தில் ஏற்பட்ட கைகலப்பில் 4 பேர் படுகாயமடைந்து பருத்தித்துறை மற்றும் யாழ். போதனா வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த சம்பவத்தின் எதிரொலியாக அப்பிரதேசத்திலுள்ள வீடொன்று தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வீட்டு உரிமையாளர்களினால் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் ஒருவர் கைது செய்யப்பட்டு, பருத்தித்துறை நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X