2025 ஜூன் 30, திங்கட்கிழமை

சாரணிய பாசறை நிகழ்வு

Kanagaraj   / 2014 மே 31 , மு.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.குகன்


யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் சாரணிய மாணவர்களின் பாசறை நிகழ்வு சாரணியப் பொறுப்பாசிரியர் எஸ்.ஜெயகாந்தன் தலைமையில் வெள்ளிக்கிழமை (30) ஆரம்பமாகியது.

இந்தப் பாசறையினை பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட  யாழ். மாவட்ட சாரணிய உதவி ஆணையாளர் வி.தில்லைவாசன் ஆரம்பித்துவைத்தார்.

சாரணிய பாசறை நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை(01) வரை தொடர்ந்து 3 நாட்கள் இடம்பெறவுள்ளதுடன், இந்தப் பாசறையில் 100 சாரணிய மாணவர்கள் 10 குழுக்களாகக் கலந்து கொள்கின்றார்கள்.

குழுக்களுக்கிடையே பல்வேறு நிலையிலான போட்டிகள் இடம்பெற்று வருகின்றன.

நேற்றய ஆரம்பநாள் நிகழ்வில் யாழ். மத்திய கல்லூரி அதிபர் எஸ்.கே.எழில்வேந்தன் பழைய மாணவர் சங்கச்செயலாளர் ம.பிரதீபன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X