2025 ஜூன் 30, திங்கட்கிழமை

கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

Menaka Mookandi   / 2014 ஜூன் 01 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

ஊர்காவற்றுறை சிவன் கோவில் வீதியிலுள்ள வீடொன்றின் கிணற்றிலிருந்து சனிக்கிழமை (31) இரவு பெண்ணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டதாக ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

அதேயிடத்தைச் சேர்ந்த மார்க்கண்டு நாகேஸ்வரி (52) என்பவருடைய சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் சனிக்கிழமை (31) இரவு கிணற்றடிக்குச் சென்ற வேளை தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் தற்போது ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X