2025 ஜூன் 30, திங்கட்கிழமை

போதைப்பொருட்களுடன் இருவர் கைது

Menaka Mookandi   / 2014 ஜூன் 01 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்.தாவடிப் பகுதியில் ஹெரோயின் மற்றும் கஞ்சா வைத்திருந்த இரண்டு சந்தேகநபர்களை சனிக்கிழமை (31) மாலை கைது செய்ததாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் 20 மற்றும் 23 வயதுடையவர்கள் எனவும், அவர்களிடமிருந்து 10 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 2 கிராம் கஞ்சா ஆகியவற்றினைக் கைப்பற்றியதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாரிற்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்தே குறித்த இருவரையும் கைது செய்துள்ளனர்.

விசாரணைகளின் போது அவர்களில் 20 வயதுடைய நபர் இம்முறை  க.பொ.த உயர்தரப் பரீட்சையில் இரண்டாவது தடவையாகத் தோற்றவுள்ளார் என தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் தற்போது பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X