2025 ஜூன் 30, திங்கட்கிழமை

பசுமாடுகளை கடத்திச் சென்ற இருவர் கைது

Kogilavani   / 2014 ஜூன் 03 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

அனுமதிப்பத்திரமின்றி மூன்று பசுமாடுகளை சிறிய ரக உழவு இயந்திரத்தில் கடத்திச் சென்ற  இருவரை நிலாவரைப் பகுதியில் வைத்து திங்கட்கிழமை (02) இரவு கைதுசெய்ததாக  அச்சுவேலிப் போக்குவரத்துப் பொலிஸ் பொறுப்பதிகாரி ஜெயதிலக பண்டா செவ்வாய்க்கிழமை (03) தெரிவித்தார்.

புத்தூர், மற்றும் ஊரெழுப் பகுதிகளைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள், வாதரவத்தையிலிருந்து சுன்னாகத்திற்கு மேற்படி பசுமாடுகளைக் கடத்திச் சென்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட உழவு இயந்திரம் மற்றும் மாடுகளை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதாகவும் இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை அச்சுவேலிப் பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X