2025 ஜூன் 30, திங்கட்கிழமை

கிராம அபிவிருத்தித் திணைக்கள மாவட்ட அதிகாரிகள் இடமாற்றம்

Menaka Mookandi   / 2014 ஜூன் 04 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.தபேந்திரன்

வடமாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தினால் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட அதிகாரிகள் இன்று புதன்கிழமை (04) நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக வட மாகாண கிராம அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் ஜே.ஜே.பெலிசியன் தெரிவித்தார்.

அதன்படி, கிளிநொச்சி மாவட்ட அதிகாரியாகக் கடமையாற்றி வந்த இ.பரராஜசேகரம் யாழ்;.மாவட்ட அதிகாரியாகவும், முல்லைத்தீவு மாவட்ட அதிகாரியாக கடமையாற்றி வந்த எஸ்.பஞ்சலிங்கம் கிளிநொச்சி மாவட்ட அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இத்துடன், யாழ் மாவட்ட அதிகாரியாக கடமையாற்றிய திருமதி நவமணி ஜெயராஜா ஓய்வுபெற்றுச் சென்றதினையடுத்தே இந்த இடமாற்றங்கள் செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன், வெற்றிடமாகவுள்ள முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பொருத்தமான மாவட்ட அதிகாரி மிக விரைவில் நியமிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X