2025 ஜூன் 30, திங்கட்கிழமை

பிரதேச சபை ஊழியரின் வீட்டில் திருட்டு

Suganthini Ratnam   / 2014 ஜூன் 04 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நா.நவரத்தினராசா

யாழ். உடுவில் அம்பலவாணர் வீதியிலுள்ள வலி. வடக்குப் பிரதேச சபை ஊழியர் ஒருவரின் வீட்டிலிருந்து  சுமார் 150,000 ரூபா பெறுமதியான பொருட்கள் செவ்வாய்க்கிழமை (03) திருட்டுப் போயுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வீட்டில் எவரும் இல்லாதபோது  பின்பக்க கதவை உடைத்துக்கொண்டு  உள்நுழைந்த திருடர்கள்  மடிக்கணினி, கமெரா, கையடக்கத்தொலைபேசி மற்றும் 20,000  ரூபா பணம் உள்ளிட்டவையை திருடிச்சென்றுள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் அவ்வீட்டு உரிமையாளர்  முறைப்பாடு செய்ததாகவும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் கூறினர்.

இது இவ்வாறிருக்க, இவ்வீட்டிலிருந்து ஒரு வருடம்  03 நாட்களுக்கு முன்னரும் 150,000 ரூபா பெறுமதியான பொருட்கள் திருட்டுப் போயிருந்ததாக பொலிஸார் கூறினர்.

இது தொடர்பில்  மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X