2025 ஜூன் 30, திங்கட்கிழமை

ஓரினச்சேர்க்கைக்கு உட்படுத்தியவருக்கு சிறை

Menaka Mookandi   / 2014 ஜூன் 04 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான்

மனநிலை பாதிக்கப்பட்ட ஆண் ஒருவரை ஓரினச்சேர்க்கைக்கு உட்படுத்திய யாழ். கொடிகாமம் பாலாவிப் பகுதியினைச் சேர்ந்த நபரொருவருக்கு ஒரு வருட கால சிறைத்தண்டனை விதித்து சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரம் இன்று புதன்கிழமை (04) உத்தரவிட்டார்.

மேற்படி நபர் கடந்த 2013ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம், அதேயிடத்தினைச் சேர்ந்த மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவரை பாலாவி பகுதியிலுள்ள பற்றைக்குள் வைத்து ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுத்தியிருந்தார்.

தொடர்ந்து மேற்படி நபரை கைது செய்த கொடிகாமம் பொலிஸார், குறித்த நபருக்கு எதிராக சாவகச்சேரி நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை இடம்பெற்று வந்தது.

இந்நிலையில் குறித்த வழக்கு இன்று (04) நீதிமன்றத்தினால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குறித்த நபர் தனது குற்றத்தினை ஒப்புக் கொண்டதினையடுத்து நீதவான் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X