2025 ஜூன் 30, திங்கட்கிழமை

சிவில் பாதுகாப்புக் குழுவில் இணைந்தவர்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு: உதய பெரேரா

Menaka Mookandi   / 2014 ஜூன் 05 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

சிவில் பாதுகாப்பு குழுவில் இணைத்துக்கொண்டவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்து கொடுப்போம் என யாழ். மாவட்ட படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா தெரிவித்தார்.

சிவில் பாதுகாப்பு குழுவில் இணைத்துக் கொள்ளப்பட்டவர்களுக்கான நியமனக் கடிதங்கள் பலாலி இராணுவ படைத் தலைமையகத்தில் இன்று வியாழக்கிழமை (05) மதியம் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

சிவில் பாதுகாப்பு குழுவில் யாழ். மாவட்ட இளைஞர் யுவதிகளையும் இணைத்துக்கொள்ளுமாறு நான் கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே அவர்கள் சிவில் பாதுகாப்பு குழுவுக்கு இணைத்துக் கொள்ளப்பட்டார்கள்.

கிளிநொச்சி மாவட்டத்தில் பல இளைஞர், யுவதிகள் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள். அந்த வகையில் யாழ் மாவட்டத்தில் உள்ள இளைஞர் யுவதிகளையும் சேர்த்துக்கொள்ளுமாறு நான் கேட்டுக்கொண்டேன். அதை ஏற்றுக்கொண்ட சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் அத்தியட்சகர்  யாழ். மாவட்டத்தில் உள்ள இளைஞர் யுவதிகள் சிவில் பாதுகாப்புக் குழுவில் இணைத்துக் கொள்ளப்பட்டார்கள்.

இதில் சில குறைபாடுகள் காணப்பட்டன. அவற்றை நீக்குவதற்கு அடுத்த கட்டமாக கூடிய தகைமை கொண்டவர்களை இத்திணைக்களத்தில் சேர்த்துக்கொள்ளவுள்ளோம். வறுமைக்கோட்டிற்குக் கீழுள்ளவர்களுக்கு சம்பள உயர்வையும் வழங்கி அவர்களையும் நல்ல எதிர்காலத்திற்கு கொண்டு செல்லவுள்ளோம்.

சிவில் பாதுகாப்பு குழுவில் சேர்த்துக்கொள்ளப்பட்டவர்களின் திறமைகளின் அடிப்படையில் அவர்கள் ஒவ்வொரு துறையிலும் இணைத்து கொள்ளப்படவுள்ளனர்.

உங்கள் பிள்ளைகளை எங்கள் பிள்ளைகள் போல நாங்கள் பாதுகாப்போம் இப்பிள்ளைகளுக்கு சம்பள ஏற்பாடுகளையும் நாங்கள் செய்து தருவோம். உங்கள் பிள்ளைகளுக்கு நல்லதொரு எதிர்காலத்தையும் அமைத்துக் கொடுப்போம் என இந்நேரத்தில் பெற்றோர்களுக்கும் நாங்கள் வாக்குறுதி தருகின்றோம் என மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X