2025 ஜூன் 30, திங்கட்கிழமை

உரிமை கோராத படகுகளை அகற்ற ஏற்பாடு

Suganthini Ratnam   / 2014 ஜூன் 06 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். ஊர்காவற்றுறை, காரைநகர் ஆகிய பகுதிக்  கடற்பரப்பில் கைவிடப்பட்டு பழுதடைந்த நிலையிலிருக்கும் மீனவர்களின் படகுகளை அகற்றுவதற்கான கேள்வி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக யாழ். கடற்றொழில் நீரியல்வளத்துறையின் உதவிப் பணிப்பாளர் நடராசா கணேசமூர்த்தி இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

கடந்த 15 வருடங்களாக உரிமை கோரப்படாதிருக்கும் 44 படகுகளே இவ்வாறு அகற்றப்படவிருப்பதாகவும்  அவர் தெரிவித்தார்.

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டவர்களின் படகுகளே இவையெனவும் அவர் கூறினார்.

மேற்படி படகுகள் முழுமையாகச் சேதமடைந்து படகுகளின் இரும்புகள் மட்டுமே தற்போது இருக்கின்றன.  இவை கடலில் அப்படியே இருப்பதினால் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு மீனவர்களுக்கு  சிரமமாக இருப்பதாகவும் இதனால், இப்படகுகள்  அகற்றப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X