2025 ஜூன் 30, திங்கட்கிழமை

மதில் வீழ்ந்து பெண் படுகாயம்

Kanagaraj   / 2014 ஜூன் 08 , மு.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-    நா.நவரத்தினராசா

தெல்லிப்பாளை சைவப்பிரகாச வித்தியாசாலைக்கு அருகில் மதில் இடிந்து வீழ்ந்ததில் பெண்ணொருவர் படுகாயமடைந்த நிலையில் நேற்று சனிக்கிழமை (07) தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையினர் தெரிவித்தனர்.

அதே இடத்தினைச் சேர்ந்த த நாகேஸ்வரன் சத்தியபவானி (42) என்பவரே படுகாயமடைந்தார்.

தனது வளர்ப்பு மாட்டினை மேய்ச்சலுக்காக கட்டச் சென்ற போது, மாட்டில் கட்டப்பட்டிருந்த கயிறு மதில் சுவருடன் மாட்டுபட்டவேளை அதனை எடுக்கச் சென்ற குறித்த பெண் மீது மதில் உடைந்து வீழ்ந்ததிலேயே அவர் படுகாயமடைந்தார்;.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X