2025 ஜூன் 30, திங்கட்கிழமை

பசுக்களை கொண்டுசென்ற இருவருக்கு சரீரப்பிணை

Suganthini Ratnam   / 2014 ஜூன் 08 , மு.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

அனுமதிப்பத்திரமின்றி 03 பசுமாடுகளை சிறிய ரக உழவு இயந்திரமொன்றில்  கொண்டுசென்றதாகக் கூறப்படும் இருவரை  மல்லாகம் நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ஜோய் மகிழ் மகாதேவா தலா 50,000  ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் வெள்ளிக்கிழமை (06) விடுவித்தார்.

அத்துடன், மீட்கப்பட்ட 03 பசுமாடுகளையும் பொலிஸாரின் பராமரிப்பில் வளர்க்குமாறும்; நீதவான் உத்தரவிட்டார்.

புத்தூர், ஊரெழு பகுதிகளைச் சேர்ந்த இவர்கள் இருவரும் வாதரவத்தையிலிருந்து சுன்னாகத்துக்கு  பசுமாடுகளை கொண்டுசென்றபோது, யாழ். நிலாவரைப் பகுதியில்    திங்கட்கிழமை (02) இரவு அச்சுவேலி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X