2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

செவிப்புலனற்றோருக்கான இலவச சிகிச்சை முகாம்

Kanagaraj   / 2014 ஜூன் 08 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

பலாலி இராணுவ தலைமையகம் ஏற்பாடு செய்துள்ள செவிப்புலனற்றோருக்கான இலவச மருத்துவ முகாம் திங்கட்கிழமை(09) யாழ். சிவில் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளதாக  யாழ். பாதுகாப்புபடை தலைமையகத்தின் ஊடக இணைப்பாளர் மேஜர் மல்லவாரச்சி ஞாயிற்றுக்கிழமை (08) தெரிவித்தார்.

இந்த மருத்துவ முகாமில், பலாலி இராணுவ வைத்தியர்களும் இந்தியாவிலிருந்து வருகை தந்த வைத்தியர்களும் இணைந்து சிகிச்சையளிக்க உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

காலை 10 மணியிலிருந்து மாலை 4 மணி வரையில் இடம்பெறவுள்ள மருத்துவ முகாமில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த செவிப்புலன் பாதிக்கப்பட்டோர் கலந்துகொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

திங்கட்கிழமை (09) இடம் பெறும் முதற்கட்ட சிகிச்சை முகாமில் உபகரணங்கள் தேவைப்படுவோரில், முதற்கட்டமாக 1000 பேருக்கு செவிப்புலன் உபகரணங்கள் வழங்குவதற்கான நடவடிக்கையும் விரைவில் எடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X