2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

வடகடல் நிறுவனத்தின் எதிர்கால செயற்திட்டங்கள் தொடர்பில் டக்ளஸ் பணிப்புரை

Menaka Mookandi   / 2014 ஜூன் 09 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் கீழான வடகடல் நிறுவனத்தின் வலை உற்பத்தி தொழிற்சாலைகள், எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்திட்டங்கள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணிப்புரைகளை வழங்கியுள்ளார்.

இதன்பிரகாரம், தொழிற்சாலைகளின் உற்பத்தி விகிதத்தை அதிகரிப்பது, தரத்தை பேணுவது சந்தைப்படுத்தல் துறையை மேலும் விஸ்தரிப்பது போன்ற விடயங்கள் தொடர்பில் அவர் பல்வேறு ஆலோசனைகளை முன்வைத்ததுடன், எதிர்வரும் இருவாரங்களில் குருநகர், லுணுவில வீரவில, ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள மூன்று தொழிற்சாலைகளினதும் உற்பத்தி விகிதம் அதிகரிக்கப்படல் வேண்டுமெனப் பணித்துள்ளார்.

மருதானையில் அமைந்துள்ள அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், அமைச்சின் செயலாளர் திருசிவஞானசோதி, அமைச்சரின் ஆலோசகர் திருமதி வீ.ஜெகராஜசிங்கம், வடகடல் நிறுவனத்தின் பதில் தலைவர் திசவீரசிங்கம் உட்பட நிறுவன அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X