2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

மினி பஸ் மீது கல்வீச்சு

Suganthini Ratnam   / 2014 ஜூன் 09 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நா.நவரத்தினராசா 

யாழ். மல்லாகத்தில் ஒழுங்கையொன்றில்  நிறுத்தி வைக்கப்பட்ட தனியார் மினி பஸ் ஒன்றின் மீது இனந்தெரியாதோர்  ஞாயிற்றுக்கிழமை (08) இரவு கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொண்ட நிலையில், அப்;பஸ்ஸின் முன்பக்கக் கண்ணாடிகள் சேதமடைந்ததாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் - மாவிட்டபுரம் வழித்தட  சேவையில் ஈடுபடும் மேற்படி மினி பஸ்ஸின் மீதே கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

தனிப்பட்ட பிரச்சினையே இக்கல்வீச்சுக்கு காரணமென  விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இது தொடர்பில் இதுவரையில் எவரும் கைதுசெய்யப்படவில்லையெனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X