2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

யுத்தத்தில் பாதிக்கப்பட்டோருக்கு சுயதொழில் கடன் உதவி

Menaka Mookandi   / 2014 ஜூன் 09 , மு.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.தபேந்திரன்


சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட 203பேருக்கு சுயதொழில் முயற்சிகள் மேற்கொள்வதற்கான கடன்கள் வழங்கப்படவுள்ளன.

இதன் முதற்கட்டமாக கரைச்சிப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட 103பேருக்கு சுயதொழில் கடன் தொடர்பாக விளக்கமளிக்கும் செயலமர்வு கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (09) இடம்பெற்றது.

அமைச்சின் புனர்வாழ்வு உதவியாளர்களான சாந்த பதமசிறி, ஏ.எம்.ஏ.நவ்றாப் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்துகொண்டு கருத்துரைகளை வழங்கினார்கள்.

இதன்போது, அமைச்சினால் சுயதொழில் தேவையினைப் பொறுத்து உயர்ந்தபட்சம் 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வரையில் கடன்கள் வழங்கப்படவுள்ளன. இதற்கு வருடாந்தம் 4 வீத வட்டி அறவிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், கரைச்சிப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட 103பேரும் நாளை தங்கள் சுயதொழில் கடன்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தனர்.

மேலும் கண்டவாளை, பூநகரி மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தெரிவு செய்யப்பட்ட 100 பயனாளிகளுக்கான சுயதொழில் கடன் வழங்கல் தொடர்பான செயலமர்வு நாளை செவ்வாய்கிழமை (10), மாவட்டச் செயலகத்தில் இடம்பெறுவதுடன், அவர்கள் தங்கள் கடன்களை மறுநாள் புதன்கிழமை (11) பெற்றுக்கொள்ள முடியும்.

மேற்படி திட்டமானது சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் சந்திரசிறி கஜதீரவின் ஏற்பாட்டில், புனர்வாழ்வு ஆணையாளர் ஈ.ஏ.சமரசிங்க ஆலோசனையில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இன்றை செயலமர்வில் கிளிநொச்சி மாவட்ட புனர்வாழ்வு அதிகாரி கு.கஜோதரன், பயனாளிகள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X