2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

உயிர்ப்பலியை நிறுத்துமாறு வேண்டுகோள்

Suganthini Ratnam   / 2014 ஜூன் 10 , மு.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.நேசமணி 

ஆலயங்களில் உயிர்ப்பலியிடும் செயற்பாட்டை நிறுத்துமாறும் இந்தச் செயற்பாடானது சைவசமயம் போதிக்கின்ற ஜீவகாருண்ய கொள்கைக்கும் மனிதநேய நடைமுறைகளுக்கும் முற்றிலும் நேர்மாறாக அமைந்துள்ளதாக சைவ அமைப்புக்கள் தெரிவித்தன. 

ஆன்மிக இணையத்தில் அங்கம் வகிக்கின்ற சிவத்தமிழ் குருமார் ஒன்றியம், சிவன் மானிட மேம்பாட்டு நிறுவனம், சிவத்தமிழ் மானிட விடியற்கழகம், சிவத்தொண்டர் அமைப்பு, சிவமங்கையர் அமைப்பு, சைவநெறிக்கூடம், சிவானந்த மகரிசி யோக நிலையம் ஆகிய அமைப்புகளுடன் இணைந்து சைவ மகா சபையினர்  திங்கட்கிழமை (09) வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'ஆலயங்களில் உயிர்ப்பலியிடும் செயற்பாடானது உலக ஒழுங்கில் கடைப்பிடிக்கின்ற ஜீவாருண்ய, சுகாதாரச் சட்டங்களை பாரதூரமாக மீறுவதாக விளங்குகின்றது. அத்துடன், சமூக அமைதியின்மையை ஏற்படுத்துவதாகவும் இந்த இரத்தவெறி நிகழ்வை  காண்கின்ற சிறுவர்கள் பிற்காலத்தில் கொடூர சிந்தனையுடைய சமூக வன்முறையாளர்களாக மாறுவதை ஊக்குவிப்பதாகவும் அமைகின்றது.

இந்த நிலையில் பலதரப்பட்ட சமய, சமூக அமைப்புக்கள், அரச திணைக்களங்கள் ஆகியவற்றின் கோரிக்கையையும் மீறி கவுணாவத்தை நரசிம்ம வைரவர் ஆலயத்தில் எதிர்வரும் சனிக்கிழமை பலியிடல் நிகழ்வை நடத்துவதற்கு ஆலய நிர்வாகம் முயற்சி எடுத்ததை அறிந்து நாம் மிகுந்த வேதனையடைகின்றோம்.  எனவே, இந்தச் செயற்பாட்டை நிறுத்துமாறு அவர்களை உருக்கமாக வேண்டி நிற்கின்றோம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X