2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

கவுணாவத்தை நரசிம்மன் ஆலய மிருகபலி வழக்கு : தீர்ப்பு இன்று

Kogilavani   / 2014 ஜூன் 10 , பி.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.நேசமணி, நா.நவரத்தினராசா

கவுணாவத்தை நரசிம்ம வைரவர் ஆலயத்தில் எதிர்வரும் சனிக்கிழமை (14) நடைபெற ஏற்பாடாகியுள்ள மிருக பலிக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பு இன்று புதன்கிழமை (11) வழங்கப்படுமென மல்லாகம் நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ஜோய் மகிழ் மகாதேவா   செவ்வாய்க்கிழமை (10) தெரிவித்தார்.

மத நம்பிக்கைகள் மற்றும் ஜீவகாருண்ய அடிப்படையில் மனிதநேயமுள்ள ஒருவர் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு திங்கட்கிழமை (09) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு விவாதிக்கப்பட்ட போது, குறித்த வழக்கின் தீர்ப்பு செவ்வாய்க்கிழமை (10) வழங்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை (10) மேற்படி வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது வழக்கின் தீர்ப்பு இன்று புதன்கிழமை (11) வழங்கப்படுமென நீதவான் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் கவுணாவத்தை, பிரான்பற்று போன்ற ஆலயங்களிலும் ஏனைய சில கிராமப்புறங்களிலுமுள்ள ஆலயங்களிலும் வேள்வி என்ற பெயரில் வருடாந்தம் நூற்றுக்கணக்கான கிடாய் ஆடுகளும் சேவல்களும் பலியிடப்படுகின்றன.

இந்தச் செயற்பாட்டை நிறுத்துமாறு மத அமைப்புகள் உட்பட பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்ற நிலையிலும், ஆலய நிர்வாகங்கள் வருடா வருடம் இந்தச் செயற்பாட்டை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், மனிதர்களை வழிப்படுத்துகின்ற ஆலயங்களில் இரத்த ஆறு ஓடுவதை அனுமதிப்பதானது எதிர்கால சந்ததியை வன்முறைக் குணம்மிக்கவர்களாக மாற்றிவிடும் என்றும் இதனால் இதனை நிறுத்துமாறும் கோரி மனிதநேயம்மிக்க ஒருவர் மேற்படி வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.

மிருக பலியை நிறுத்துமாறு பல்வேறு சமய அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் இதற்கான தீர்ப்பு எப்படி அமையும் என்று மக்களிடையேயும் மத அமைப்புக்களிடையேயும் இதேவேளை மிருகபலியை நடத்துகின்ற ஆலய நிர்வாகிகளிடையேயும் எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X